மாமனிதர் ந.இரவிராஜின் 11ம் ஆண்டு நினைவு நாள்.

ஆசிரியர் - Editor I
மாமனிதர் ந.இரவிராஜின் 11ம் ஆண்டு நினைவு நாள்.

படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா இரவிராஜ் அவர்களின் 11 ம் ஆண்டு நினைவு நேற்றைய தினம் சாவகச்சேரியில் அனுஷ்டிக்கப்பட்டது.

சாவகச்சேரி பிரதேச செயலகத்துக்கு முன்பாக அமைந்துள்ள ரவிராஜின் சிலையடியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.

சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சி.துரைராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாமனிதர் ரவிராஜின் உடன்பிறவா சகோதரர் முதலாவது தீபத்தை ஏற்றி அஞ்சலி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

வடக்குமாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் தமிழரசுக்கட்சி சாவகச்சேரி தொகுதிக்கிளை தலைவர் க.அருந்தவபாலன் சாவகச்சேரி நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினரும் நகர இளைஞர் கழக தலைவர் ஞா.கிஷோர் உட்பட பெருமளவான பொதுமக்களும் கலந்துகொண்டு மலர்தூவி தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு