மீண்டும் வீணை சின்னத்தில் ஈ.பி.டீ.பி

ஆசிரியர் - Editor I
மீண்டும் வீணை சின்னத்தில் ஈ.பி.டீ.பி

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஈழமக்கள் ஐ னநாயக கட்சி(ஈ.பி.டி.பி) தனித்து வீணை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக கட்சியி ன் யாழ்.மாவட்ட இணை செயலாளர்களா ன சிவகுரு பாலகிருஷ்ணன், மற்றும் ஜயா த்துரை ஸ்ரீ ரங்கேஷ்வரன் ஆகியோர் கூறி

யுள்ளனர்.

சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக இன்று காலை யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையி லேயே மேற்கண்டவாறு கூறியுள்ளனர். இ தன்போது மேலும் கூறுகையில்,

உள்ளூராட்சி சபை தேர்தலில் ஈ.பி.டி.பி தனித்து போட்டியிட உள்ளது. 1998 தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10 சபைகள் பெற்றோம். பின்னர் ஐக்கிய முன்ணணியுடன் கூட்டு சேர்ந்து இணக்க அரசியலில் போட்டியிட்டோம்.

இன்றைய சூழ்நிலையில் நாம் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளோம். நல்லாட்சி என சொல்லப்படும் அரசாங்கம் உலகில் பெரும் மோசடியான மத்திய வங்கி மோசடி செய்தவர்களுடன் கூட்டு சேர விரும்பவில்லை. அதனால் தனித்து போட்டியிடுகின்றோம்.

ஆனாலும் மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி எனும் கொள்கையில் மாற்றமில்லை.

அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக..

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ்.பல்கலைகழக மாணவர்கள் நடத்திய போராட்டம் தோல்வி அல்லது இலக்கை அடையவில்லை. இதனால் அரசியல் கை திகளின் கோரிக்கை வெற்றியடையவில் லை. அதற்கு காரணம் அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ் அரசியல்வாதிகளின் பாராமுகம் ஆகும். நல்லாட்சி அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ் அரசியல்வாதிகள் காத்திரமான நடவடிக்கையை எடுக்கவில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு