பொலிஸ் நிலையங்களில் இருந்து சேவையில் ஈடுபடும் 1990 அம்புலன்ஷ் சேவை..

ஆசிரியர் - Editor I
பொலிஸ் நிலையங்களில் இருந்து சேவையில் ஈடுபடும் 1990 அம்புலன்ஷ் சேவை..

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு கையளித்த இந்திய அரசின் அன்பளிப்பான 7  அவசர நோயாளர் சேவை வண்டிகளும் குடாநாட்டின் 7 பொலிஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் நிதி உதவியில் வடக்கு மாகாணத்திற்கு கையளிக்கப்பட்ட 20 நோயாளர் காவு வண்டிகளில் 7 காவு வண்டிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு  வழங்கப்பட்டது.

இவ்வாறு வழங்கப்பட்ட 7 நோயாளர் காவு வண்டிகளும் தற்போது 7 பொலிஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றது.

இவற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் , சாவகச்சேரி , அச்சுவேலி , நெல்லியடி , சுன்னாகம் , வட்டுக்கோட்டை மற்றும் ஊர்காவற்றுறை ஆகிய பொலிஸ் நிலையங்களின் ஊடாகவே இச் சேவை மேற்கொள்ளப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு