கடலாமை பிடித்த இருவருக்கு தலா 20 ஆயிரம் தண்டம்..

ஆசிரியர் - Editor I
கடலாமை பிடித்த இருவருக்கு தலா 20 ஆயிரம் தண்டம்..

மாதகல் கடற்பரப்பில் கடல் ஆமை பிடித்த இரு மீனவர்களிற்கு தலா 20 ஆயிரம் ரூபா வீதம் 40 ஆயிரம் ரூபா குற்றப்பணம் விதித்து மல்லாகம் நீதிபதி நீதிமன்ற நீதிவான் ஆனந்தராஜா தீர்ப்பளித்தார்.

மாதகல் கடற்பரப்பில் சுமார் 15 கிலோ எடையுடைய கடல் ஆமை ஒன்றினை   பிடித்த குற்றத்திற்காக  இரு மீனவர்களை கடலில் வைத்து கடற்படையினர்  நேற்றைய தினம் கைது செய்தனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

இவ்வாறு கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்ட இரு மீனவர்களையும் திணைக்கள அதிகாரிகள்  மல்லாகம் நீதிபதி முன்பாக ஆஜர் செய்யதனர்.

இதன்போது குறித்த இரு மீனவர்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டதன்பெயரில் மேற்படி குற்றப்பணம் விதிக்கப்பட்டதோடு ஆமையை மீண்டும் கடலில் விட உத்தரவிடப்பட்டது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு