4700 பேர் யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்சலால் பாதிப்பு.

ஆசிரியர் - Editor I
4700 பேர் யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்சலால் பாதிப்பு.

யாழ்.மாவட்டத்தில் இந்த வருடம் 4700 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள தாக கூறியிருக்கும் யாழ்.பிராந்திய சுகா தார சேவைகள் பணிப்பாளர் வைத்திய க லாநிதி நந்தகுமார் மலேரியா நுளம்பின் பெருக்கமும் யாழ்.மாவட்டத்தில் அதிகரித் திருப்பதாக கூறியுள்ளார்.

இது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பா ளர் ஊடகங்களுக்கு தகவல் தருகையில் யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் 2016ம் ஆண்டு 1700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2017ம் ஆண்டு 4700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பருவமழை ஆரம்பித்திருக்கும் நிலையில் டெங் கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்திருக்கின்றது. கடந்த வருடத்தை காட்டிலும் இந்தவருடம் அதிகரித்துள்ளது. 

கடந்த வருடம் 1700 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந் த வருடம் நவம்பர் மாதம் வரையில் சுமார் 4700 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

அதேசமயம் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்ப ட்டிருக்கின்றது. மேலும் மலேரியா நுளம்பு பெருக்கம் பல இடங்களில் அவதானிக்கப்பட்டிருக்கின்றது. 

ஆரம்பத்தில் மன்னார் மாவட்டத்தில் அவதானிக்கப்பட்ட இந்த மலேரியா நுளம்பு தற்போ து யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த மலேரியா நுளம்புகள் கிணறு, தண்ணீர்; தொட்டிகள், பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட நுளம்பு பெருக்கத்துக்கு ஏதுவான இடங்களில் அதிகளவில் பெருகி வருகின்றது. 

இந்நிலையில் நுளம்பு பெருகும் சாத்தியங்கள் உள்ள பொதுமக்களின் கிணறுகளில் சுகாதார திணைக்களத்தின் ஊடாக மீன் குஞ்சுகள் விடப்படுகி ன்றன. 

மக்களின் பாவனையில் இல்லாத கிணறுகளுக்கு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றது. எனவே இந்த விடயத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாக உள்ளது. 

உதாரணமாக மலேரியா நுளம்பு களை கட்டுப்படுத்துவதற்கான மீன் குஞ்சுகளை சுலபமாக பெற முடியாதுள்ளது. எனவே அந்த மீன் குஞ்சுகள் உள்ளவர்கள் மீன்களை தந்து உதவலாம். 

அதேபோல் நுளம்பு பெருகும் இடங் களை அழித்து நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் மக்கள் உதவிகளை வழங்கவேண்டும் என பணி ப்பாளர் மேலும் கேட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு