மரக்குற்றிகள் கடத்தியவர் - சாவகச்சேரி பொலிஸாரிடம் வசமாக சிக்கினார்

சாவகச்சேரிப்பகுதியில் சூட்சுமமான முறையில் தேக்கு மரக்குற்றிகளை கடத்தி சென்ற ஒருவரை நேற்றைய தினம் சனிக்கிழமை பொலிசார் கைது செய்துள்ளனர் .
முல்லைத்தீவு பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சல்லிக்கற்கள் ஏற்றிவருவதைப்போன்று மரக்குற்றிகளுக்கு மேலே சல்லிக்கற்களை போட்டு சுமார் 15 இலட்சம் பெறுமதியான 18 காட்டுத்தேக்கு மரக் குற்றிகள் டிப்பர் வாகனத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் கடத்திவரப்பட்டது
அது தொடர்பான தகவல்களை அறிந்த பொலிஸார் குறித்த டிப்பர் வாகனத்தை சாவகச்சேரி நகர்ப்பகுதியில் வைத்து மறித்து மரக்குற்றிகளை கைப்பற்றியுள்ளதுடன் சாரதியையும் கைது செய்துள்ளனர்