SuperTopAds

வடக்கில் யாசகம் பெறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை

ஆசிரியர் - Editor II
வடக்கில் யாசகம் பெறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை

பொது இடங்களில் யாசகம் செய்பவர்களைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல உத்தியோகத்தர்களும் வழிகாட்டுதல் கலந்துரையாடல் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, அதில் ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன்  வளவாளராக பங்குபற்றி கருத்து தெரிவிக்கும் போது,  

 வடக்கு மாகாணத்தில் யாசகம் செய்பவர்களால் ஏற்படும் பிரச்சினைகளையும், யாசகம் சார் சட்டங்களையும் மத்திய, மாகாண ரீதியல்லாது சகலரும் ஒன்றிணைந்த சட்ட ஏற்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என கோரி இருந்தார். 

அதற்கு பதிலளிக்கும் முகமாக  பொது இடங்களில் யாசகம் செய்பவர்களைக் கட்டுப்படுத்த கடந்த காலங்களைப்போன்று தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்குரிய ஒழுங்குள் மேற்கொள்ளப்படும், என ஆளுநர் தெரிவித்தார்.