வற்றாப்பளைக்கு சென்று திரும்பிய இளைஞன் விபத்தில் உயிரிழப்பு

முல்லைத்தீவு - வற்றாப்பளை ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கு சென்று வீடு திரும்பிய இளைஞன் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளிலில் ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் ஒலுமடு பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் வாய்க்காலினுள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நித்திரை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.