SuperTopAds

நடுக்கடலில் கவிழ்ந்த ரோகிங்கியா அகதிகள் படகு: 427 பேர் பலி!

ஆசிரியர் - Admin
நடுக்கடலில் கவிழ்ந்த ரோகிங்கியா அகதிகள் படகு: 427 பேர் பலி!

ரோகிங்கியா அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்தில் கிட்டத்தட்ட 427 பேர் பலியாகியுள்ளனர். மியான்மரில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் காரணமாக ரோகிங்கியா முஸ்லிம்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். வங்கதேசத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரோகிங்கியா அகதிகள் உள்ளனர். இது தவிர, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு கடல் வழியாக ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளவும் அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.     

துரதிர்ஷ்டவசமாக, இந்த ஆபத்தான முயற்சிகள் பெரும்பாலும் துயரத்தில் முடிவடைகின்றன.

கடந்த மே 9-ஆம் திகதி, வங்கதேசத்தின் காாக்ஸ் பஜார் அகதிகள் முகாமில் இருந்து இந்தோனேசியா நோக்கிச் சென்ற 267 ரோகிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று மியான்மர் கடல் பகுதியில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 201 பேர் உயிரிழந்தனர், 66 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.

மறுநாள், மே 10-ஆம் தேதி, 247 ரோகிங்கியா அகதிகளுடன் சென்ற மற்றொரு படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த இரண்டாவது துயர சம்பவத்தில் 226 பேர் உயிரிழந்தனர், 21 பேர் மட்டுமே உயிர் தப்பினர்.

இந்த இரண்டு நாட்களில் நடந்த படகு விபத்துக்களில் மொத்தம் 427 ரோகிங்கியாக்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.