நுளம்பு வலையில் பாடசாலை மாணவி சுறுக்கிட்டுத் தற்கொலை!

ஆசிரியர் - Editor II
நுளம்பு வலையில் பாடசாலை மாணவி சுறுக்கிட்டுத் தற்கொலை!

யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை சோமசுதந்தரம் வீதி பகுதியில் நுளம்பு வலையில் சுறுக்கிட்டு தொங்கிய நிலையில் பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நுளம்பு பெருக்கம் அதிகமாக காணப்படுகின்றமையினால் நுளம்பு வலைக்குள் நித்திரையாகுமாறு தாய் கண்டித்துள்ளார்.

இந்நிலையில் தனிமையில் உறங்கிய குறித்த மாணவி நுளம்பு வலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரியில் கல்வி பொது தராதர பத்திர உயர்த்தரத்தில் கல்வி கற்கும் 18 வயதுடைய மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாணவி விளையாட்டாக செய்தாரா அல்லது வேறு ஏதும் பிரச்சினைகள் காணப்படுகின்றதாக என்பது தெரியாது என குறித்த மாணவியின் தாய் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவியின் சடலம் உடற்கூற்று பரிசோதரனையின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு