500 கிலோ மஞ்சளுடன் ஒருவர் கைது

இந்தியாவிலிருந்து சட்டத்துக்குப் புறம்பாக கடத்திவரப்பட்ட 448 கிலோ கிராம் மஞ்சள் யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணை பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று மண்டைதீவில் இந்த கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
அதனை கடத்தி வந்தவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றைய இருவர் தப்பித்துள்ளதாகவும் அவர்களைத் தேடி வருவதாகவும் பொலிஸார் கூறினர்.