SuperTopAds

ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் சுயேச்சைக் குழு வேட்பாளர் எம்.எஸ்.எம். இர்பான்(பாஹிர்)

ஆசிரியர் - Editor III
ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் சுயேச்சைக் குழு வேட்பாளர் எம்.எஸ்.எம். இர்பான்(பாஹிர்)

 ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் சுயேச்சைக் குழு   வேட்பாளர் எம்.எஸ்.எம். இர்பான்(பாஹிர்)

 ரமழான் மாதத்திலுள்ள  புனிதம் என்பது மனங்களிலும் வாழ்வினிலும் பின்பற்றப்படும் போது தான் இம்மையிலும் மறுமையிலும் ஒளி கிடைக்கும்  என என  சமூக செயற்பாட்டாளரும் சம்மாந்தறை பிரதேச சபைத் தெர்தலில் சுயேட்சைக்குழு -3 ரேடியோ சின்னத்தில் போட்டியிடும் சமூக செயற்பாட்டாளர் வேட்பாளர் எம்.எஸ்.எம். இர்பான்(பாஹிர்) விடுத்துள்ள ஈதுல் பித்ர் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் அனுப்பி வைத்துள்ள நோன்புப் பெருநாள் செய்தியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

ரமழான் மாதத்திலுள்ள  புனிதம் என்பது மனங்களிலும் வாழ்வினிலும் பின்பற்றப்படும் போது தான் இம்மையிலும் மறுமையிலும் ஒளி கிடைக்கும். இதனை முஸ்லிம்களாகிய நாம் மிகக் கவனமாகவும் கரிசனையோடும் செய்து வருகிறோம் என்பதற்கு நானும் நீங்களும் சாட்சி.

2025 ஆம் ஆண்டின் புனித ரமழானும் ஈதுல் ஃபித்ரும் நமது வாழ்வில் மாற்றமானது. இவ்வேளையில் நோன்பினாலும் தவத்தினாலும் உருவாக்கப்பட்ட நமது  சுயேட்சைக் குழு சார்பாக   அனைவரையும் பெருநாள் வாழ்த்துக்களால் ஆசித்துக் கொள்கிறேன்.

இன்றைய நாட்களில் நமது உறவுகள் பலஸ்தீன மண்ணில் அல்லாஹ் எழுதிய படியான வெற்றிக்குரிய நாள் வரை எதிராளிகளின் துரோகத்தனத்தால் வஞ்சிக்கப்பட்டு கொண்டு நோன்பிருந்து புத்தாடைக்கு பதிலாக இரத்த ஆடை அணிந்தபடி வலிகொண்ட பெருநாளை அனுபவித்துக் கொண்டிருப்பதையும் இவ்வேளையில் கனத்த மனதுடன் ஞாபகப்படுத்தி உணர்வுகளால் பங்கு கொள்கிறேன்.

முன்னெப்போதுமில்லாத வகையில் மிகவும் சிக்கலான பிரச்சினைகளுக்கு முழு உலகமும் முகம்கொடுத்துள்ள இதுபோன்றதொரு காலகட்டத்தில் அடுத்த மனிதர்கள் பற்றிய சமூக பிரக்ஞை மற்றும் உளக் கட்டுப்பாட்டின் மூலமே நல்ல சூழலொன்றை உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதே ரமழான் உலகிற்கு வழங்கும் செய்தியாகும்.இந்த ரமழானில் நாம் எவ்வாறு அல்லாஹு தஆலாவுடனும் அல்-குர்ஆனுடனும் தொடர்பில் இருந்தோமோ, வணக்க வழிபாடுகளில் மூழ்கித்திழைத்தோமோ, பாவங்களை விட்டும் தூரப்பட்டு நன்மைகளில் அதிகமதிகம் ஈடுபட்டோமோ, அதனைப் போன்று எதிர்வரக்கூடிய காலங்களிலும் வணக்க வழிபாடுகள், கொடுக்கல் வாங்கல்கள், குடும்ப சமூக வாழ்வு, பண்பாட்டு விழுமியங்கள் போன்றவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவர்களாக திகழவேண்டும். அதற்கான பயிற்சியினையே சென்ற ரமழான் எமக்கு அளித்துவிட்டுச் சென்றிருக்கிறது. புனித ஷவ்வால் மாத தலைப்பிறை நாட்டின் சில பிரதேசங்களில் நேற்று மாலை தென்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டமையால் இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.

அதே போன்று அனைத்து முஸ்லிம்களும் ரமழானிலே எப்படி ஒருமித்து நோன்பு நோற்று சமூக ஒற்றுமையினை வெளிக்காட்டினோமோ, அதே ஒற்றுமையினை தேசத்தின் நலனுக்காகவும் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுக்காகவும் கடைபிடித்து நாட்டிற்கு பாத்திரமானவர்களாக திகழவேண்டுமென இப்பெருநாள் தினத்திலே வலியுறுத்துகிறேன்.எனவே, நம்பிக்கையீனம், சந்தேகங்களை கலைந்து புனித அல்குர்ஆனின் போதனைகளை ஆழ்ந்து பின்பற்றுவதற்கு இந்த ரமழான் சிறந்த சந்தர்ப்பமாகும் என நான் நம்புகிறேன்.

ரமழானின் மூலம் கிடைக்கும் உயர் பெறுமானங்கள் உலகிற்கு அமைதியை கொண்டுவரட்டும் என்ற எதிர்பார்ப்புடன் இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.