குண்டுப் புரளியால் கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய விஸ்தாரா விமானம்!

ஆசிரியர் - Admin
குண்டுப் புரளியால் கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய விஸ்தாரா விமானம்!

குண்டு மிரட்டல் காரணமாக இந்தியன் எயார்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

மும்பையிலிருந்து புறப்பட்ட 96 பயணிகள் 8 பணியாளர்களை ஏற்றிய "விஸ்தாரா" விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விமானத்தில் குண்டு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு பயணிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு விமானம் சோதனை செய்யப்பட்டது.

அதற்காக குண்டு செயலிழக்கும் பிரிவு மற்றும் இராணுவ கொமாண்டோ படை அழைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு