வடமாகாணம் முழுவதும் சனி, ஞாயிறு தினங்களில் மின்தடை

ஆசிரியர் - Admin
வடமாகாணம் முழுவதும் சனி, ஞாயிறு தினங்களில் மின்தடை

வடமாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் புதிய மின்மார்க்கம் நிர்மாணிக்கப்படுவதன் காரணமாக எதிர்வரும் சனி, ஞாயிறு தினங்களில் வடமாகாணம் முழுவதும் மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று(12)மேலும் தெரிவிக்கையில்,

குறிப்பிட்ட இரு தினங்களிலும் காலை-08 மணி முதல் மாலை-05.30 மணி வரை வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.

வடமாகாணத்தில் மின்சார ஸ்திரத் தன்மையை அதிகரிக்கும் நோக்கில் புதிய மின்மார்க்கம் அமைக்கப்படுவதாகவும், இதன் பொருட்டே குறித்த இரு தினங்களிலும் மின்தடை அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு