19 இந்திய மீனவர்கள் விடுதலை- படகோட்டிகளுக்கு தலா 40 இலட்சம் ரூபா தண்டம்!

ஆசிரியர் - Admin
19 இந்திய மீனவர்கள் விடுதலை- படகோட்டிகளுக்கு தலா 40 இலட்சம் ரூபா தண்டம்!

31 இந்திய மீனவர்களுக்கு எதிரான வழக்கு 06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது ஜூன் 22ஆம் திகதி 3 படகுகளில் எல்லை தாண்டி வந்து கைதான 22 மீனவர்களில் 19 பேர், ஆறு வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 24 மாத சிறைத் தண்டனை என்ற அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.     

அத்துடன் படகோட்டிகள் மூவரும் தலா 40 இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்தவேண்டும். இல்லாவிட்டால் 1 வருட கடூழிய சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அடுத்ததாக ஜூலை 23ஆம் திகதி கைதான 9 மீனவர்கள் ஏற்கனவே ஒருதடவை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், குற்றப்பத்திரிகை இரண்டாவது தடவையாகவும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்தும் இம்மாதம் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு