14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் இந்தியாவுக்கு தப்பியோட்டம்..

ஆசிரியர் - Editor I
14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் இந்தியாவுக்கு தப்பியோட்டம்..

முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 14 வயதுச் சிறுமி ஒருவர் கடந்த யூன் மாதம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தச் சிறுமி ஒருவர் கடந்த 11.06.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக சென்ற நிலையில், அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை சோதனையில் தெரிய வந்துள்ளது.

சிறுமியிடம் சட்டவைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சிறுமியை கடந்த ஏப்ரல் மாதம் முள்ளியவளை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் பாலியல் துஷ் பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்தச் சிறுமி, சிறுவர் நன்நடத்தை பிரிவினால் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய முள்ளியவளை பகுதியை சேர்ந்த சந்தேக நபரான இளைஞனை 

கைது செய்யும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலீசார் ஈடுபட்டவேளை, அந்த இளைஞன் கிராமத்தில் இருந்து த லைமறைவாகி தற்போது இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

 முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பாலியல் குற்றச்செயல் புரிந்த இந்த இளைஞனை கைது செய்யும் நடவடிக்கையில் இலங்கை பொலிசார் ஈடுபட்டுவருகின்றா ர்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு