யாழ்.நாவாந்துறையில் மின் ஒழுக்கு காரணமாக வீடு தீக்கிரை..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவாந்துறையில் மின் ஒழுக்கு காரணமாக வீடு தீக்கிரை..

யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் மின் ஒழுக்கு காரணமாக வீடு ஒன்றின் மேல்தளம் முற்றாக இருந்து நாசமாகியுள்ளது. வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் உரிமையாளர் வேலைக்கு சென்று வந்து திரும்பி பார்த்த வேலை வீடு முற்றாக எரிந்துள்ளது. 

குறித்த சம்பவம் நேற்று காலை இடம் பெற்றுள்ளது வீடு எரிந்து கொண்டிருப்பதை அவதானித்த அயலவர்கள் மின்சாரத்தை நிறுத்திவிட்டு தண்ணீரைக் கொண்டு தீ பரம்பலை கட்டுப்படுத்தியுள்ளனர்.

தீப்பரவலில் வீட்டின் மேல் தளம் கட்டில் இரண்டு தொலைக்காட்சி பெட்டிகள், அலுமாரி வீட்டின் ஏனைய உபகரணங்கள் எரிந்து 10 லட்சத்துக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பான பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு