கட்டுப்பாடற்ற வேகம்! மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான ஹயஸ் வாகனம், ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாடற்ற வேகம்! மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான ஹயஸ் வாகனம், ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்..

மன்னார் -மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இசைமாலைத் தாழ்வுப் பகுதியில் ஹயஸ் ரக வாகனம் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியதில் அதில் பயணித்த 14 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவமானது நேற்று (21)மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கல்முனையில் இருந்து மன்னார் மறிச்சுக்கட்டி பிரதேசத்திற்குக் குறித்த வாகனத்தில் வருகை தந்தவர்களின் வாகனம் முருங்கன், இசைமாலை தாழ்வு, நரிக்காடு வளைவு பகுதியில் உள்ள மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.


விபத்தில் காயமடைந்த அனைவரும் முருங்கன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக 7 பேர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இவர்களில் வயோதிப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வாகனத்தில் பயணித்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சார்ந்த உறவினர்கள் எனத் தெரிய வருகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு