3ம் முறையாக ஆட்சியமைக்க ஆணை வழங்கிய மக்களுக்கு நன்றி - பிரதமர் நரேந்திர மோடி..

ஆசிரியர் - Editor I
3ம் முறையாக ஆட்சியமைக்க ஆணை வழங்கிய மக்களுக்கு நன்றி - பிரதமர் நரேந்திர மோடி..

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது. இதன்படி, 290-க்கும் அதிகமான இடங்களில் பாரதிய சனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வருகிறது.

தற்போதைய நிலவரப்படி பாரதிய சனதா கட்சி 160க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரதமர் மோடி வெற்றி பெற்றார்.

இவர் 6,12,970 வாக்குகள் பெற்றார். 3-வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற வெற்றிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி.

நாட்டு மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை தேர்தல் வெற்றி கொடுத்துள்ளது. இவ்வளவு பெரிய அளவிலான தேர்தல் பயிற்சியை நடத்திய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி.

இந்தியாவின் தேர்தல் செயல்முறை மற்றும் முறையின் நம்பகத்தன்மை குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கிறார்கள் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு