குடாநாட்டில் கனமழை பொலிகண்டியில் 17 குடும்பங்கள் பாதிப்பு.

ஆசிரியர் - Editor I
குடாநாட்டில் கனமழை பொலிகண்டியில் 17 குடும்பங்கள் பாதிப்பு.

யாழ் குடாநாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்சியாக பெய்துவரும் மழை காரணமாக யாழ் வல்வெட்டித்துறை பொலிகண்டி பாலாவி நலன்புரி நிலையத்தில் உள்ள 17குடும்பங்களை சேர்ந்த 67பேர் இடம்பெயர்ந்து அருகில் உள்ள பொதுநோக்கு மணடபத்தில் தங்கியுள்ளனர்.

வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து பொதுநோக்கு மண்டபத்தில் தங்கியுள்ள மக்களுக்கான சமைத்த உணவினை பருத்துறை பிரதேச செயலகத்தினர் வழங்கிவருகின்றனர். 

இவர்கள் 1990ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக பலாலியில் இருந்து இடம்பெயர்ந்து கடந்த 27ஆண்டுகளாக பொலிகண்டி பாலாவி நலன்புரி நிலையத்தில் வசித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு