பிரதேச செயலர் இல்லாமையினால் பாதிக்கப்படும் கிளி.கண்டாவளை மக்கள்..

ஆசிரியர் - Editor I
பிரதேச செயலர் இல்லாமையினால் பாதிக்கப்படும் கிளி.கண்டாவளை மக்கள்..

கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவிற்கான நிரந்தர பிரதேச செயலர்  இதுவரை நியமிக்கப்படாமையினால் சேவை பெறவேண்டிய பொதுமக்கள் பெரும கஸ்ரங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்;டாவளைப்பிரதேசத்திற்கான பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த கோ.நாகேஸ்வரன்  அண்மையில் மாரடைப்பினால் உயிரிழந்த நிலையில் அதற்கான வெற்றிடம் இதுவரை நிரப்பப்படாமல் காணப்படுகின்றது.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக கடமையாற்றி வரும் திருமதி ஜெயராணி பரமோதயன்  கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவின் பதில் பிரதேச செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 

குறித்த பதில் பிரதேச செயலர் வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரமே கண்டாவளைப்பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் நிலையில் ஏனைய நாட்கள் பிரதேச செயலர் இல்லாத 

நிலையில் பிரதேச செயலாளரின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு செல்லும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதுடன், பிரதேச  செயலரின் அனுமதிகளை 

பெறவேண்டியவேலைகளுக்கான அனுதிகளைப் பெறுவதிலும் காலதாமதங்கள்காணப்படுகின்றன என்று பல்வேறு தரப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளதுடன், 

பிரதேச செயலர் வெற்றிடமாககாணப்படும் கண்டாவளைப்பிரதேச செயலகத்திற்கான நிரந்தரமான பிரதேச செயலர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பினரும கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு