மாணவர்களை திருப்பியனுப்பி பாடசாலை நிர்வாகம், மாணவர்கள் அசௌகரியம்..

ஆசிரியர் - Editor I
மாணவர்களை திருப்பியனுப்பி பாடசாலை நிர்வாகம், மாணவர்கள் அசௌகரியம்..

யாழ்ப்பாணக் குடாநாட்டின் பிரபல பாடசாலைகள் சில நேற்றைய தினம் பாடசாலைக்குச் சென்ற மாணவர்களை நுழைவாயில் வைத்து திருப்பி அனுப்பியதனால் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கினார்கள்.

ஆசிரியர் சங்கங்கள் சில  பணிப் புறக்கனிப்பில் ஈடுபட்டமையினால் பாடசாலைகளிற்கு பல ஆசிரியர்கள் சமூகமளிக்கவில்லை. மேலும் பல ஆசிரியர்கள் சமூகமளித்தபோதும் செயல்படவில்லை. 

இவ்வாறு செயல்படாதமைக்காக பாடசாலைக்குச் சமூகமளித்த மாணவர்களையும் காலையிலேயே நுளைவாயிலில் வைத்து திருப்பி அனுப்பினர்.

இதன் காரணமாக முச் சக்கர வண்டி உள்ளிட்ட வாடகை வாகனங்களில் வருகை தந்த மாணவர்களும் பிள்ளைகளைப் பாடசாலையில் இறக்கிவிட்டுப் பணிக்குச் செல்லும் பெற்றோர் மீண்டும் வீடு திரும்பி பிள்ளைகளை விட்டுச் செல்லும் அசௌகரியங்களும் நிழ்ந்ததோடு பாடசாலை நிர்வாகத்தினை கடிந்துகொண்டு சென்றனர்.

இவ்வாறு மாணவர்களை திருப்பி அனுப்பும் செயல் தொடர்பில் உடனடியாக வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரின் கவனங்களிற்கும் கொண்டு செல்லப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு