மருதங்கேணியில் அடாத்தாக தங்கியுள்ள மீனவர்களை வெளியேற்றக்கோரி வழக்கு தாக்கல்..

ஆசிரியர் - Editor I
மருதங்கேணியில் அடாத்தாக தங்கியுள்ள மீனவர்களை வெளியேற்றக்கோரி வழக்கு தாக்கல்..

வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்ட விரோதமாக அரச நிலத்தில் வாடி அமைத்து கடல் அட்டை தொழில் புரிபவர்களை அங்கிருந்து அகற்ற உத்தரவிடக்கோரி மருதங்கேணிப் பிரதேச செயலாளர் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் தங்கியிருந்து கடல் அட்டைத் தொழில் புரியும் பிறமாவட்ட மீனவர்கள் அரச நிலத்தில் அத்துமீறி குடியமர்ந்தே குறித்த தொழிலை மேற்கொள்கின்றனர். இவ்வாறு தொழில் புரியும் 8 நிறுவனங்கள் மீது நேற்றைய தினம் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் குறித்த நிறுவனங்களிற்கு எதிராக எதிர்வரும் செவ்வாய்க் கிழமை மேற்படி வழக்குகள் எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. இதேநேரம் யாழ்ப்பாண மாவட்ட எல்லைப் பகுதியில் வாடி அமைத்துள்ள 4 நிறுவனங்கள் தொடர்பில் நாளைய தினம் பருத்தித்துறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

குறித்த பகுதியில் உள்ளூர் மீனவர்களைப் பாதிக்கும் வகையில் வெளி மாவட்ட மீனவர்கள் பலர் தங்கி நின்று சட்டத்திற்கு முரணாக தொழில் புரிவதனால் பல பாதிப்புக்கள் நிகழ்வதாக உள்ளூர் மீனவர்கள் நீண்டகாலமாக சுட்டிக்காட்டிவந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு