மாணவி றெஜீனா படுகொலையை கண்டித்து கிளி.முரசுமோட்டையில் பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..

ஆசிரியர் - Editor I
மாணவி றெஜீனா படுகொலையை கண்டித்து கிளி.முரசுமோட்டையில் பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..

கிளிநொச்சி முரசுமோட்டை றோ. க வித்தியாலயத்தில் யாழ் சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த றெஜினா என்ற பள்ளி மாணவியின் படுகொலையை கண்டித்தும் கவணயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த றெஜினா என்ற பள்ளி மாணவியின் படுகொலையை கண்டித்தும் நாடு முழுதும் இடம் பெறும் பெண்கள் மற்றும் சிறுவர் மீதான வன்கொடுமைகளை கண்டித்தும் இன்று(06-07-2018) வெள்ளிக்கிழமை   காலை 10 மணியளவில் மேற்படி கவனயீர்ப்புபோராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கன் இலங்கைமிசன் திருச்சபை கோரக்கன் கட்டு பிரதேச சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் பாடசாலை வளாகத்தில் குறித்த பேரணி ஆரம்பமானது.

குறித்த பேரணியில் அருட்தந்தையர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பாடசாலை மாணவர்கள், பொது அமைப்புக்கள், அப்பிரதேச வர்த்தகர்கள், பெண்கள் அமைப்புக்கள், என பலர் கலந்து கொண்டனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு