யாழ். மாநகர மேயர் வேட்பாளர் பதவிக்கு நான்கு முனைப் போட்டி?

ஆசிரியர் - Editor II
யாழ். மாநகர மேயர் வேட்பாளர் பதவிக்கு நான்கு முனைப் போட்டி?

யாழ்.மாநகர சபை மேயர் வேட்பாளர் பதவிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் நான்கு முனைப் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. யாழ்.மாநகர சபை மேயர் வேட்பாளராக , வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களான இ.ஆர்னோல்ட் மற்றும் ஜெயசேகரம் , மூத்த ஊடகவியலாளரும் காலைக்கதிர் பத்திரிகை ஆசிரியருமான என். வித்தியாதரன் , மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் ஆகிய நால்வருக்கிடையில் போட்டி உள்ளதாக கூறப்படுகிறது.


இவர்களில் யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் தமிழரசு கட்சிக்குள் இழுபறி ஏற்பட்டு உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பாக, ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் சிரித்துக்கொண்டு அந்த கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்துக்கொண்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு