சம்மாந்துறை தொழில்நுட்ப மன்றத்தினால் இலவச செயலமர்வு

ஆசிரியர் - Editor III
சம்மாந்துறை தொழில்நுட்ப மன்றத்தினால் இலவச செயலமர்வு

சம்மாந்துறை தொழில்நுட்ப மன்றத்தினால் இலவச செயலமர்வு

 

2024 ஆம் ஆண்டு க.பொ.த. (உ.தர) பரீட்சையை எதிர்நோக்கவிருக்கின்ற மாணவர்களுக்கான இலவச செயலமர்வினை இம்முறையும் சம்மாந்துறை தொழில்நுட்ப மன்றம் ( Technology Forum) ஏற்பாடு செய்திருந்தது.  

இக் கருத்தரங்கு இன்று (வியாழன்) காலை 10.00 மணிக்கு EDC இல் சம்மாந்துறை தொழில்நுட்ப மன்றத்தின் (Technology Forum) உறுப்பினர்களால் நடாத்தப்பட்டிருந்தது.

முதற்கட்டமாக இச் செயலமர்வில் 2024 உயர்தர பரீட்சை ௭ழுதவுள்ள மாணவர்களுக்கான தொழிநுட்பவியலுக்கான விஞ்ஞானப் (Science For Technology) பாடத்திற்கான கடந்தகால பரீட்சை வினாத்தாள்களை தழுவிய வினாக்களும்,எதிர்பார்க்கை வினாக்களும் என தெளிவு படுத்தபட்டது.  

இது போன்ற இலவச செயலமர்வினை தொடர்ந்தும் நடத்த எதிர்பார்த்துள்ளதாக சம்மாந்துறை தொழில்நுட்ப மன்றத்தின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு