அடுத்த மாகாணசபை தோ்தலில் முதலமைச்சா் வேட்பாளராக சீ.வி.விக்னேஸ்வரனை நிறுத்த கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்து...

ஆசிரியர் - Editor I
அடுத்த மாகாணசபை தோ்தலில் முதலமைச்சா் வேட்பாளராக சீ.வி.விக்னேஸ்வரனை நிறுத்த கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்து...

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை அடுத்த மாகாணசபை தேர்தலில் முதல மைச்சர் வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும். அது கட்சியின் தீர்மானம் அல்ல. 

மேற்கண்டவாறு நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு

கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 2013ம் ஆண்டு மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை கட்சி முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த தீர்மானித்திருந்தது. 

ஆனால் பின்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் வேறு ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு தீர்மானித்து சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தினார். 

தமிழ் மக்களுக்காகவும், தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காகவும் பல தியாகங்களை செய்திருந்த மாவை சேனாதிராஜா அப்போதும் தனக்கு கிடைக்கவேண்டி பதவியை தியாகம் செய்து சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சராக்க இணங்கினார். 

அவ்வாறான தியாகத்தை எல்லோரும் செய்யவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேலும் அடுத்துவரும் வடமாகாணசபை தேர்தலில் மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தவேண்டும் என நான் கூறியிருந்தது கட்சியின் தீர்மானம் அல்ல. 

கட்சியின் பேச்சாளர் என்றவகையிலும், கட்சியின் நிலைப்பாடுகளை ஓரளவுக்கு புரிந்து கொண்டதன் அடிப்படையிலும் என்னுடைய தனிப்பட்ட கருத்தாகவே அதனை கூறியிருந் தேன்;. மற்றபடி அடுத்த மாகாண சபை தேர்தலில் யார்? 

முதலமைச்சர் வேட்பாளர் என்பதை கட்சி இன்னமும் தீர்மானிக்கவில் லை. அவ்வாறு கட்சி யாரை தீர்மானிக்கிறதோ அதற்கு நாங்கள் இணங்குவோம். மேலும் சீ.வி.விக்னேஷ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த கூடாது என்பதற்கு காரணங்கள் இருக்கின்றன. 

முதலமைச்சர் சீ. வி.விக்னேஷ்வரன் வடமாகாணசபையால் செய்ய கூடிய விடயங்களை கூட செய்யவில்லை. கட்சிக்கு விசுவாசமற்ற முறையில் செயற்பட்டமை, தேர்தல் காலங்களில் கட்சியின் நிலைப்பா டுகளுக்கு எதிராக செயற்பட்டமை இப்படி பல குற்றச்சாட்டுக்கள் 

என்னிடம் உள்ளன. ஆகவே அவர் அடுத்த முறை மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படக் கூடாது என்பது என்னுடைய கருத்து என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு