மழை வெள்ளம் காரணமாக மிதக்கின்றது பாடசாலை

ஆசிரியர் - Editor III
மழை வெள்ளம் காரணமாக மிதக்கின்றது பாடசாலை

அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட  அல் பஹ்ரியா மகா வித்தியாலயம் வெள்ள நீர் தேங்கி நிற்பதனால் மாணவர்கள் ஆசிரியர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, அக்கரைப்பற்று ,   நிந்தவூர் ,நாவிதன்வெளி , சம்மாந்துறை ,பிரதேச   பகுதிகளில் தற்போது பெய்து வரும் அடை  மழை  காரணமாக வெள்ளம் தேங்கியுள்ளதுடன் அங்கு வாழும் மக்கள் பெரும்  சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த மழை வெள்ளத்தின் காரணமாக இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை,  பாண்டிருப்பு , நற்பிட்டிமுனை , சேனைக்குடியிருப்பு  ,காரைதீவு , சம்மாந்துறை,  அக்கரைப்பற்று,  பகுதிகளில்  இப்பிரதேசத்தில் பல  குடும்பங்கள் வெள்ளத்தினால் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதுடன் தற்போது அங்குள்ள மக்கள்  வீடுகளிற்குள் மழை வெள்ளம் உட்புகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அரச தனியார் நிறுவனங்கள் கூட வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளன.இதற்கு காரணம் மழை நீர் வழிந்தோடுவதற்குரிய முறையான வடிகால் இன்மையே முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டும் மக்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதே வேளை அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட  அல் பஹ்ரியா மகா வித்தியாலயமும் வெள்ள நீரில் முழ்கும் நிலையில் உள்ளது.இங்கு கல்வி கற்கின்ற மாணவர்கள் ஆசிரியர்கள் வெள்ள நீர் தேங்கி உள்ளமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் வெள்ள நீர் காரணமாக சிறுவர்கள் பாடசாலைக்கு செல்ல சிரமப்பட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் பல  குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது     வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக சில முகத்துவாரங்கள்  வெட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் வெள்ள நீர் தேங்கி காணப்படுகின்ற நிலைமையே தொடர்கதையாகவுள்ளது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு