இளம் வயதில் பல துறைசார் பணிகளில் தடம்பதித்த மற்றும்உளவியல் ஆலோசகர் நுஷைபா நஷீர்

ஆசிரியர் - Editor III
இளம் வயதில் பல துறைசார் பணிகளில் தடம்பதித்த மற்றும்உளவியல் ஆலோசகர் நுஷைபா நஷீர்

இளம் வயதில் பல துறைசார் பணிகளில் தடம்பதித்த மற்றும்உளவியல் ஆலோசகர் நுஷைபா நஷீர்

 

 கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூரைபிறப்பிடமாக கொண்ட அலியார் நஷீர் மற்றும் பாத்திமா பஷீனா தம்பதியினருக்குப் பிறந்தபுதல்வி  நுஷைபா நஷீர் ஆவார். இவரது தந்தை கல்முனைசணச அபிவிருத்தி வங்கியில் கணக்காளராக பணிபுரிகிறார். இவரது தாய் வீட்டு மனையாளாக இருக்கிறார்.இவருக்கு இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.

 இவர்  தரம்01இல் இருந்து உயர்தரம் வரையிலான கல்வியை கமு/கமு/அல் மஷ்ஹர் தேசிய பாடசாலையில் கல்விகற்றார். அப்பாடசாலையில் உயர் தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்று வந்தார்.

 இவர் பாடசாலை காலத்தில் பாடசாலையில் முதலுதவி, சுற்றாடல்கழகம், இசை வாத்திய குழு, சுகாதார கழகம், மாணவர் பாராளுமன்றம் அதிலும் கூடிய வாக்குகளைபெற்று பாடசாலையில் தெரிவு செய்யப்பட்டமையும் பாடசாலையில் சுற்றாடல் அமைச்சராக தெரிவுசெய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும். மேலும் சுற்றாடல் கழகத்தில் முன்னோடிபதக்கம், மஞ்சள் வர்ணப் பதக்கம், பச்சை வர்ணப் பதக்கம், வெள்ளி வர்ணப் பதக்கம், தங்கவர்ணப் பதக்கம், ஜனாதிபதிப் பதக்கம் என பதக்கங்களை பெற்றுக் கொண்டுள்ளார். தமிழ் தினப்போட்டி, ஆங்கில தினப் போட்டி மற்றும் சிங்கள தின போட்டி என அனைத்திலும் பங்கு கொண்டுள்ளார்.வகுப்புத் தலைவராகவும்  அனைத்திலும் இணைந்துசெயற்பட்டுள்ளார்.

 இவர் உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைகழகம்தெரிவாகியும் கூட சில சூழ்நிலை காரணமாக  பல்கலைகழகம்செல்லமுடியாமல் போயிற்று. எனினும் முயற்சியைக் கைவிடாது   தேசிய சமூக மேம்பாட்டு நிறுவனத்தில் சமூக சேவையில்கலைமாணி பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்றார். வெளிவாரியாக படித்துக் கொண்டிருக்கின்றார்.இவர்  Diploma in counselling psychology,Diploma in English, Diploma in Sinhala, Diploma in human resource management,pre metrial counselling, child psychology போன்ற கற்கை நெறிகளை பூர்த்தி செய்துள்ளார்மற்றும்  அதனோடு மார்க்கக் கல்வியினையும் பூர்த்திசெய்துள்ளார். மேலும் beauty culture and henna course இனையும் பூர்த்தி செய்துள்ளார்.தற்போது சட்டத்துறையில் uk university இல் படித்து வருவதோடு b.ed ஐயும் இலங்கை கல்லூரிஒன்றிலும் செய்து வருகின்றார். சமூக விஞ்ஞானிகள்சங்க ஆராய்ச்சியாளராக செயற்பட்டு வருகின்றார்.

 இவர் பொழுதுபோக்காக புத்தகங்களை விரும்பிப் படிப்பார்.அதுவே இலக்கிய துறையில் இவரை காலடி எடுத்து வைக்க காரணமாயிற்று. எனவே

இவர் ஒரு எழுத்தாளராகவும் கவிதாயினியாகவும் காணப்படுகின்றார்.சிகரம் சஞ்சிகை ஆசிரியர் குழுவிலும் மற்றும் துணிந்தெழு சஞ்சிகையில் உறுப்பினராகவும்பத்திரிகையாளராகவும் (journalist) பணிபுரிந்து வருகின்றார். Story telling மற்றும்short film maker ஆகவும் காணப்படுகிறார்.motivational speaker என்பதும் குறிப்பிடத்தக்கது.தற்போதுஸ்ரீ லங்கா பென் கிளப், தூரிகை முற்றம் அம்பாறை மாவட்ட கலைஞர்கள் என பல எழுத்தாளர்கள்குழுவிலும் பல கவிதை குழுமங்களிலும் ஆற்றலை வெளிப்படுத்தி வருகின்றார். சிறந்த  கவிதை எழுதுவதனால்  கவிச்சிகரம் என்ற புனைப்பெயர் இவருக்கு சூட்டப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாது ஊடகத்துறையிலும் இவரது பயணம் வியாபித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கஅம்சமாகும். ஸ்கை தமிழ் மீடியாவில் பத்திரிகையாளராகவும் guru tv இல் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும்முத்தூறல் மற்றும் சிலோன் நிவ்ஸ் இல் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும்k k media இல் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் LACSDO மீடியா உறுப்பினராகவும் செயற்பட்டுவருகிறார்.

 இவர் edu free academy யில் நிர்வாக உறுப்பினராக கல்விக்கானசெயற்திட்டத்தில் பங்கு கொண்டு செயற்பட்டுள்ளார். பாடசாலை மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு,வினாத்தாள் விநியோக பணிகளில் ஈடுபட்டு செயற்பட்டுள்ளார். Institute for freeeducation இல் volunteer ஆக செயற்பட்டுள்ளார். மேலும் Eclat unites இல் எழுத்துத் துறையில்பயணித்துள்ளார். அது மட்டுமல்லாது Eclat units உடன் இணைந்து உயர்தரம் மற்றும் சாதாரணதரமாணவர்களுக்கு இலவச கருத்தரங்கை நடாத்தியுள்ளார். இதில் grow green செயற்திட்ட ஒருங்கிணைப்பாளராககடமையாற்றியுள்ளார்.

 இவர் சமூகத்தில் ஒரு முன்மாதிரியான சமுக ஆர்வலராகவும்பயணித்துக் கொண்டிருக்கின்றார். இவரது முதல் இளைஞர் கழகத்துடனான பயணம் ycli அதாவதுyouth community leadership initative உடன் ஆரம்பமானது எனக் குறிப்பிடுகின்றார். பின்னர்CPBR (central for peace building and Reconcillation), undp (United nationsdevelopment programs) hekadav, family planning assosiation அதிலும் கிழக்கு மாகாணத்தில்mojo fellowship இலும் பணிபுரிந்து சமூகத்தில் உள்ள பெண்கள் சார்ந்த பிரச்சினைகளை குறும்படம்மூலம் வெளிக் கொண்டு வந்துள்ளார் என்பது சிறப்பான விடயமாகும்.

 இவரது துறைசார் பணிகள் எண்ணிலடங்காதவை என்றே குறிப்பிடலாம்.அவையாவன, இவர் Human rights organization இலும் ஒரு அங்கத்தவராகவும் பணியாற்றி வருகின்றார்.Eastern youths organization இல் அம்பாறை மாவட்ட உதவி செயலாளராக கடமையாற்றுகின்றார்.Human development association இல் நிந்தவூர் அமைப்பாளராக பணியாற்றுகின்றார். green east இன் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராகசெயற்படுகின்றார். women lioness அமைப்பினுடைய நிறுவனராகவும் இருக்கின்றார்.Mission green இனுடைய volunteer ஆகவும் செயற்படுகின்றார். சர்வோதய மனோஹரி  நிகழ்ச்சித் திட்ட TOT ஆகவும் செயற்படுகின்றார்.Srilanka youth alliance இனுடைய உறுப்பினராகவும் செயற்படுகின்றார். Iconic youthssrilanka இனுடைய நிந்தவூர் இணைப்பாளராக செயற்படுகின்றார். women in managmentsrilanka இன் new genaration இனுடைய அங்கத்தவராகவும் பல செயற்திட்டங்களிலும் செயற்படுகின்றார்.unity mission trust இல் அங்கத்தவராகவும் செயற்படுகின்றார். leo மற்றும் lion இனுடையஅங்கத்தவராகவும் Coroatia நாட்டினுடைய தூதுவராகவும் செயற்படுகின்றார். kapppomorganization இல் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் USA செயற்திட்ட அம்பாறை, மட்டக்களப்புமாவட்ட பொறுப்பாளராகவும் செயற்படுகின்றார். ayevac  அதாவது alliance of youth to end violenceagainst children அமைப்பினுடைய அம்பாறை மாவட்ட தலைவாராகவும் செயற்படுகின்றார். கை கொடுக்கும்கரங்களினுடைய அங்கத்தவராக செயற்படுகின்றார். peace and community action இனுடைய நிந்தவூர்உறுப்பினராக காணப்படுகின்றார். eclat unites இனுடைய உறுப்பினராக காணப்படுகின்றார்.

 மேலும் நிகழ்வுகளின் வளவாளராகவும் செயற்படுகின்றார்.bay organization இல் volunteer ஆக பணியாற்றுகின்றார். Youth democracy alliance இல்உறுப்பினராக செயற்படுகின்றார். women empowerment association இல் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராகசெயற்பட்டு வருகின்றார். Global youths biodiversity network இல் volunteer ஆகவும்இருக்கின்றார். அம்பாறை மாவட்ட youth fedaration இல் உறுப்பினராக செயற்படுகின்றார்.International youth alliance for peace இனுடைய global volunteer ஆக செயற்படுகின்றார்.ESDF இன்  youth peace advocates செயற்திட்டஅங்கத்தவராக காணப்படுகின்றார். Smart Teach Academy இல் ஆசிரியராகவும் நிறுவனராகவும்காணப்படுகின்றார். Sunfo global federation இல் அங்கத்தவராக இருக்கின்றார். Zeroplastic அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயற்படுகின்றார். CP arts கலா மன்றத்தினுடையஅங்கத்தவராகவும் காணப்படுகின்றார். Srilanka unites இல் volunteer ஆகவும் உறுப்பினராகவும்பணி புரிகின்றார். Top and hit maas production இல் அங்கத்தவராகவும் செயற்படுகின்றார்.Pond social service இனுடைய அங்கத்தவராகவும் செயற்படுகின்றார். Islam is myreligion எனும் இஸ்லாமிய பதிவுகளை இடும் குழுவின் தலைவராகவும் செயற்படுகின்றார்.NAFSO அமைப்பின் அங்கத்தவராகவும் செயற்படுகின்றார். Rotaract and rotary club அங்கத்தவராககாணப்படுகின்றார். United mission trust இனுடைய உறுப்பினராக காணப்படுகின்றார்.Create pool இனுடைய அங்கத்தவராகவும் காணப்படுகின்றார். இந்தியாவிலுள்ள  இலக்கிய குழுமப் பொறுப்புக்களிலும் காணப்படுகின்றார்.உளவியல் ஆலோசகராகவும் youth leadership  வளவாளராகவும்பணிபுரிகின்றார். இவரது  பிரதேசத்தில் சமூகசேவையாற்றி வருகின்றமையும் பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்தவரது தேவைகளை அறிந்து உதவிகளைவழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

மேலும் இவர் CIML இனாலும் பல்கலைகழகங்கள் இணைந்து நடாத்திய mojo traning இல் செயற்பட்டுள்ளார்.youth advocacy network srilanka இனுடைய sexual and reproducting  சம்மந்தமான நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.SLPIஇனால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளருக்கான நிகழ்வில் இளம்ஊடகவியலாளராக கலந்து கொண்டுள்ளார். yes hub இனால் நடாத்தப்பட்ட environmentinnovation சம்பந்தமான நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.  amazon கல்லூரியின் ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.  beruwala news alert இல் அம்பாறை மாவட்டகுறிப்பிடத்தக்கதாகபணிபுரிந்தார். Minnal radio fm இல் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.

 

இவரது திறமைகள் ஒரு குறித்த வட்டத்தில் முடங்கிப் போகாமல்  photography துறையிலும் art மற்றும் craftpainting இலும் வெளிக்காட்டப்படுகின்றன. மேலும் இவரது பகுதிநேர செயற்பாடாக தோட்டம்செய்தல் மற்றும் இசைக்கருவிகளை வாசிப்பதாகும்.இவர் பெற்றுக் கொண்ட வெற்றிகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.அண்மையில் International achivers foundation இனால் women achivers award இற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். LACSDO media இன் திறமைக்கான விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவினுடைய production for legal & human rights foundation இனால் women'sday இனை முன்னிட்டு sprit of humanity award கிடைக்கப் பெற்றது என்பது முக்கிய அம்சமாகும்.pen club national conference இல் விருது கிடைக்கப் பெற்றது. eastern youthsorganization இன் 4 ஆவது ஆண்டுவிழாவினை முன்னிட்டு விருது கிடைக்கப் பெற்றது. மேலும்அண்மையில் இவரது டிப்ளோமா படிப்பினை நிறைவு செய்து பட்டமளிப்பு விழா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கசிறப்பம்சமாகும்.

 

இவர் சவால்கள் வெற்றிக்கான படியாகவே கருதுகின்றார்.இவரை சுற்றி பல விமர்சனங்களும் தவறான கதைகளும் வந்த போதிலும் இவர் நம்பிக்கையினை இழக்கவில்லை.இவருக்கு மனதில் இருந்த விடயம் நான் இன்னும் சாதித்து சிகரம் தொட வேண்டுமென்பதே இவரதுஅவாவாக இருந்தது. இதற்கு இவரின் தாய் தந்தைக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றார்என இவ்வேளையில் கூறிக்கொள்கிறார். அவர்களின் ஊக்கமும் முயற்சியுமே இவர் வெற்றி பெறகாரணமாக இருந்தது. அது மட்டுமல்லாது இவரது சகோதர சகோதரிகளின் ஒத்துழைப்பு, இவரது நண்பர்களின்ஒத்துழைப்பு ஆறுதலான வார்த்தைகள் மற்றும் குடும்பத்தினுடைய ஒத்துழைப்பு இவை அனைத்துமேஇவர் உச்சம் தொட காரணமாக இருந்தது எனக் குறிப்பிடுகின்றார்.இவரது குடும்ப பின்னணியினை பொறுத்த வரைக்கும் முன்மாதிரியானபடித்தவர்கள், சிறந்த குடும்ப கட்டமைப்பு, சிறந்த வழிகாட்டல், சிறந்த அறிவுரை என அவர்களதுவழிகாட்டல்கள் காணப்பட்டது. அவர்களின் முன்மாதிரியே இவரை சமூகத்தில் முன்மாதிரியாகமிளிர வைத்தது என்பதைக் குறிப்பிடுகின்றார்.

 

இவரின் எதிர்கால இலட்சியம் ஒரு சட்டத்தரணியாக வர வேண்டும்என்பதேயாகும்.  சமூகத்தில் ஒரு முன்மாதிரியானசமூக ஆர்வலராகவும் வர வேண்டும் என்பதோடு அரசியலிலும் நுழைந்து கொள்ளும் ஆர்வமும் இருப்பதாககுறிப்பிடுகின்றார்.

 

Face book - Binth nazeer

Instagram - iam_miss_pretty

 

சமூகத்துக்கு கூற எத்தனிக்கும் கருத்துக்கள்

  ● சமூகத்தில்பெண்களும் ஆண்களுக்கு நிகராக சாதிக்க வேண்டும்.

 ● பெண்களும் தலைமைத்துவத்திற்கு வர வேண்டும். அந்தவகையில்சவால்கள், பிரச்சினைகள்  எமக்கு வரும் நாமும்சலைத்து விடாமல் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். பிரச்சினை இல்லையென்றால்  வாழ்க்கை சுவாரஷ்யம் இல்லாமல் போய் சமநிலையற்றுபோய் விடும்.

 ● எமக்கு வரும் விமர்சனங்களே எம்மை ஒரு படி உயர்த்தும்என்ற நம்பிக்கையுடன் வாழ்கையின் அடுத்த படி எடுத்து செல்ல வேண்டும்.

 இளம் வயதிலே பல துறைசார் சாதனைகளை தன் வசப்படுத்திக்கொண்ட நுஷைபா நஷீர் அவர்களின் எதிர்கால இலட்சியங்கள் நிறைவேற வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக்கொண்டு வாழ்த்துகிறோம்.

 

 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு