இலங்கை ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட குசல்

ஆசிரியர் - Editor II
இலங்கை ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட குசல்

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் மிகமோசமாக விளையாடியமைக்காக இலங்கை அணி பொதுமக்களிடம் பகிரங்கமாக  மன்னிப்பு கோரியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குசல்மென்டிஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.

2023 உலக கிண்ணப்போட்டிகளில் மோசமாக விளையாடும்படி எந்த தரப்பும் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அணித்தலைவர் பதவியை ஏற்றமை உங்களின் துடுப்பாட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தியதா என்ற கேள்விக்கு மென்டிஸ் எதிர்பாராத தலைமைத்துவம் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் ஆனால் எனினும் முன்னரும் தலைமை வகித்ததால் அதுதான் காரணம் என தெரிவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு