ஜே.வி.பி யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது -

ஆசிரியர் - Editor II
ஜே.வி.பி யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது -

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மக்கள் விடுதலை முன்னணி நேற்று யாழ்ப்பாணம், வவுனியா, மாத்தளை, குருணாகல் உட்பட மேலும் சில மாவட்டங்களில் கட்டுப்பணத்தை செலுத்தியது.

இதனடிப்படையில், யாழ்ப்பாண மாவட்டத்திற்காக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் மத்திய செயற்குழு உறுப்பினருமான ராமலிங்கம் சந்திரசேகர தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று கட்டுப்பணத்தை செலுத்தினர்.

வடமேல் மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன நேற்று குருணாகல் மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

வவுனியா மாவட்டத்திற்காக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட தலைவர் உபாலி சமரசிங்க மற்றும் மாத்தளை மாவட்டத்திற்காக மாத்தளை மாவட்ட தலைவர் கமகெதர திஸாநாயக்க ஆகியோர் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு