30 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியர்களுக்கான பிரியாவிடை வைபவம்

ஆசிரியர் - Editor III
30 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியர்களுக்கான பிரியாவிடை வைபவம்

30 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியர்களுக்கான பிரியாவிடை வைபவம் 

அஞ்சல் அலுவலகத்தில் மிக நீண்ட காலமாக பணியாற்றி ஓய்வு பெற்ற  இரு உத்தியோகத்தர்களின்  சேவை நலன் பாராட்டும் வைபவம் இன்று கல்முனை பிரதம தபாலகத்தில் கல்முனை பிரதம அஞ்சல் அதிபர்   யூ.எல்எம். பைஸர் தலைமையில்   நடைபெற்றது.

 கடந்த காலங்களில் மிகச்சிறப்பாக அஞ்சல் சேவையில் மதிதயன் மற்றும் நாகராஜா ஆகியோர் செயற்பட்டதுடன் அவர்கள் நிகழ்வில்  பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவு சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் இவ்விருவரும் தத்தமது சேவைக்கால அனுபவங்களை நிகழ்வில்  உரைகளாக முன்வைத்ததுடன் குறித்த இருவரையும் ஓய்வு காலங்களில் சிறப்பாக குடும்பங்களுடன் தேகாரோக்கியத்துடன் வாழ  நிகழ்வில் பங்குபற்றியோர் ஆசிர்வாதங்களை வழங்கினர்.

இந்நிகழ்வில்    பிரதேச  தபால்   உத்தியோகத்தர்கள் குடும்ப உறுப்பினர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு