பேய் ஓட்டுவதாக கூறி 18 பெண்ணை வன்புணர்ந்த மந்திரவாதி!! -கோவிலில் நடந்த கொடூரம்-

ஆசிரியர் - Editor II
பேய் ஓட்டுவதாக கூறி 18 பெண்ணை வன்புணர்ந்த மந்திரவாதி!! -கோவிலில் நடந்த கொடூரம்-

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் பேயை விரட்டுவதாக கூறி நபர் ஒருவர் இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

உத்தர பிரதேசத்தின் மிர்சாபூர் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவரின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதாக எண்ணிய குடும்பத்தினர், மந்திர தந்திரம் அறிந்த மோதிலால் (வயது 52) என்ற நபரிடம் அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அப்பெண்ணை பரிசோதித்த மோதிலால் அவருக்கு பேய் பிடித்திருப்பதாக கூறியுள்ளார். அதனை நம்பிய இளம்பெண்ணின் குடும்பத்தினர் அதற்கு 4,000 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று கேட்டதையும் கொடுத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை அன்று மோதிலாலிடம் இளம்பெண்ணை அவரது தந்தை அழைத்து சென்றுள்ளார். குறித்த பெண்ணை கோவிலுக்கு பின்னால் உள்ள அறைக்கு அழைத்து சென்ற மோதிலால், அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். 

அதன் பின் மறுநாள் தன்னை வந்து சந்திக்குமாறு அப்பெண்ணிடம் கூறிய மோதிலால், நடந்ததை யாரிடமாவது கூறினால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

ஆனாலும், இளம்பெண் தனது குடும்பத்தினரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். அதன் பின் மோதிலால் மீது பெண்ணின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

விசாரணையை ஆரம்பித்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு