149 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

ஆசிரியர் - Editor III
149 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

149 ஆவது  உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு உதிரம் கொடுத்து உயிர் காப்போம்' எனும் தொனிப்பொருளில்  கல்முனை அஞ்சல் அலுவலகத்தில் இரத்ததான முகாம் கல்முனை பிரதம அஞ்சல் அதிபர்   யூ.எல்எம். பைஸர் தலைமையில் இன்று காலை  நடைபெற்றது.

இதன் போது கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி காமினி விமலசூரிய அம்பாறை அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் கே.பி.எஸ். பிரியந்த உட்பட   பிரதேச  தபால் அதிபர்கள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 குறித்த இரத்ததான முகாமில் அதிகமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் கல்முனை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பணிப்பாளர் வைத்தியர் கே.ஹரிபிரசாத் இரத்ததானம் தொடர்பில் பல்வேறு விளக்கங்களை வழங்கினார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு