பேருந்தில் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொந்தரவு! பொலிஸ் பரிசோதகருக்கு நடந்த தரமான சம்பவம்...

ஆசிரியர் - Editor I
பேருந்தில் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொந்தரவு! பொலிஸ் பரிசோதகருக்கு நடந்த தரமான சம்பவம்...

தனியார் பேருந்தில் பயணித்த 18 வயதான பாடசாலை மாணவியை பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கித்துல்கல பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையின் பின்னர் சீத்தாவகபுர பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் குறித்த பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் ருவன்வெல்ல நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தத்  துன்புறுத்தல் குறித்து மாணவி பஸ் நடத்துனரிடம் தெரிவித்ததையடுத்து, நடத்துனர் மாணவியிடம் அவரது தந்தையின் கைத்தொலைபேசி இலக்கத்ததை பெற்று  இது குறித்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு