மத்திய,மாகாண அமைச்சர்கள் வரும்வரை போராட்டம் தொடரும் சுழிபுரம் மக்கள் உறுதி..

ஆசிரியர் - Editor I
மத்திய,மாகாண அமைச்சர்கள் வரும்வரை போராட்டம் தொடரும் சுழிபுரம் மக்கள் உறுதி..

பாடசாலை மாணவி கொலையைக் கண்டித்தும் நீதி கோரியும் மாணவர்களும் பொது மக்களும் இணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டம் நடைபெறுமிடத்திற்கு மாகாண கல்வி அமைச்சர் மற்றும் மத்திய, மாகாண சிறுவர் விவகார அமைச்சர்கள் வருகைதர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாணவியின் கொலைக்கு நீதிகோரி சுழிபுரத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்தப் போராட்டத்திற்கு அரசியல் வாதிகள் பலரும் இன்று காலை வருகை தந்திருந்தனர்

ஆனாலும் போராட்டம் நடைபெறுமிடத்திற்கு மேற்படி அமைச்சர்கள் இன்னமும் வருகை தரவில்லை.

இந் நிலையிலையே மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் மாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், 

மத்திய அரசின் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் ஆகியோர் போராட்டம் நடைபெறுமிடத்திற்கு வருகைதர வேண்னுமென அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவ்வாறு அமைச்சர்கள் வரும் வரையில் தமது போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருக்கின்றனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு