மாணவி றெஜினா படுகொலையை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் அரசியல்வாதிகள்..

ஆசிரியர் - Editor I
மாணவி றெஜினா படுகொலையை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் அரசியல்வாதிகள்..

சுழிபுரத்தில் பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் அரசியல் தரைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

மாணவியின் படுகொலை செய்யப்பட்டகை கண்டுத்தும் நீதியை வலியுறுத்தியும் மாணவர்களும் பொது மக்களும் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆயினும் இந்தப் போராட்டத்தில் அரசியல் வாதிகள் எவரும் கலந்து கொள்ளவில்லையென பலத்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 

இந்நிலையில் சுழிபுரம் சந்தியில் இன்று காலை நடைபெற்ற வீதி மறியல் போராட்டத்தில் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா ஈழ மக்கள் ஐனநாயக்க் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா,

 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் மாகாண சபை உறுப்பிர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு