தேர் ஊர்வலத்தின்போது தேர் கலசம் உயர் அழுத்த மின் கம்பியில் பட்டதால் இருவர் பலி, 3 பேர் படுகாயம்...

ஆசிரியர் - Editor I
தேர் ஊர்வலத்தின்போது தேர் கலசம் உயர் அழுத்த மின் கம்பியில் பட்டதால் இருவர் பலி, 3 பேர் படுகாயம்...

நமுனுகுல - பூட்டவத்தை கதிரேசன் கோவிலின் வருடாந்த தேர் ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கியதில் 02 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் மூன்று பேர் பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஊர்வலத்தின்போது தேர், உயர் அழுத்த மின்கம்பியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் ஆரம்பமான ஊர்வலம் இன்று அதிகாலை வரை நீடித்ததாகவும், தேரை கோவிலுக்கு கொண்டு செல்லும்போது, ​​

உயர் அழுத்த மின்கம்பியில் தேரின் மேல்பகுதி மோதி மின்சாரம் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில்  27 வயது மற்றும் 37 வயதான அதே பகுதியைச் சேர்ந்த இருவரே உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நமுனுகுல  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு