2 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போட்டி!! -இறுதிப்போட்டி முதல் சுற்று சமனில் முடிந்தது-

ஆசிரியர் - Editor II
2 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போட்டி!! -இறுதிப்போட்டி முதல் சுற்று சமனில் முடிந்தது-

அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் உலக கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 

இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3 ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.

அரையிறுதி சுற்றில் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகள் சமனிலையில் முடிந்தது. இதைத் தொடர்ந்து சமனிலை தவிர்ப்பு சுற்று நடத்தப்பட்டு, இதில் வெற்று பெறுவோர் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை உருவானது. 

அதன்படி சமனிலை தவிர்ப்பு சுற்றில் பிரக்ஞானந்தா, உலகின் மூன்றாம் இடத்தில் வீரரான பேபியானோ கருணாவை எதிர்கொண்டு விளையாடினார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து விளையாடிய கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். 

இதன் மூலம் உலக கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார். 

இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், போட்டியின் அடுத்த சுற்று இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு