சிறுமி சிவநேஸ்வரன் றெஜினா கொலையை கண்டித்து மாணவா்கள், மக்கள் இணைந்து போராட்டம்..

ஆசிரியர் - Editor I
சிறுமி சிவநேஸ்வரன் றெஜினா கொலையை கண்டித்து மாணவா்கள், மக்கள் இணைந்து போராட்டம்..

காட்டுப்புலத்தில் மாணவி படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து காட்டுப்புலம் அ.த.க பாடசாலை மாணவர்களும் மக்களும் இணைந்து பாடசாலைக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காட்டுப்புலத்தில் ஆரம்பித்த போராட்டம் ஆர்ப்பாட்டமாக மாறி சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலை ஊடாக சுழிபுரம் சந்தியை அடைந்து அங்கு வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

தொடர்ந்து சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரிக்குச் சென்று அங்கு கல்லூரிக்கு முன்பாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு