யாழ்.மாவட்டத்தில் 2 மாதங்களில் மட்டும் போதைக்கு அடிமையான 33 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 2 மாதங்களில் மட்டும் போதைக்கு அடிமையான 33 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்...

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த சுமார் 33 சிறுவர்கள் கடந்த இரு மாதங்களில் போதைக்கு அடிமையான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்தின் போதே அதிகாரிகளால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் போதைக்கு அடிமையாகி வரும் நிலைமை அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாத காலப்பகுதிக்குள்ளேயே 33 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இவர்களில் 11 பேர் ஹெரோயின் போதைப்பொருளுக்கும் 08 பேர் ஐஸ் போதைப்பொருளுக்கும் , 07 பேர் கஞ்சா போதைப்பொருளுக்கும் ஏனையவர்கள் போதை மாத்திரைகளுக்கும் அடிமையாகி உள்ளனர். 

அதேவேளை புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கும் அதிகளவான சிறுவர்கள் அடிமையாகி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு