இளைஞனை கடத்திச் சென்று தாக்கி, கொலை மிரட்டல்! பெண் உட்பட 3 பேர் கைது...

ஆசிரியர் - Editor I
இளைஞனை கடத்திச் சென்று தாக்கி, கொலை மிரட்டல்! பெண் உட்பட 3 பேர் கைது...

கப் வாகனத்தில் இளைஞனை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதுடன் கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட 3 பேர் அவிசாவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய கப் வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடத்தல் சம்பவத்துக்கு உதவிய குற்றத்துக்காக மூவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக, கடந்த 24ஆம் திகதி இளைஞர் ஒருவர் கப் வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டதுடன் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு