தளபதி விஜய்க்கு அபராதம் விதித்த பொலிசார்

ஆசிரியர் - Editor II
தளபதி விஜய்க்கு அபராதம் விதித்த பொலிசார்

போக்குவரத்து விதிகளை மீறியதாக தளபதி விஜய்க்கு போக்குவரத்து போலிசார் அபராதம் விதித்துள்ளனர்.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 234 தொகுதிகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார் தளபதி விஜய்.

தளபதி விஜய்யின் இந்த செயல் பாராட்டுகளை அதிகம் பெற்றாலும் சிலர் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.

அரசியலில் களமிறங்குவதற்காக தளபதி விஜய் காய் நகர்த்துகிறார் என கூறப்படுகிறது, இந்நிலையில் 234 தொகுதிகளிலும் உள்ள நிர்வாகிகளுடன் நேற்று தளபதி விஜய் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பனையூர் இல்லத்தில் சுமார் 2 மணிநேரம் ஆலோசனை நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நீலாங்கரையில் இருந்து பனையூர் வரும் வழியில் உள்ள சிக்னலில் தளபதி விஜய்யின் கார் நிற்காமல் சென்றுள்ளார்.

இது அங்கிருந்த கண்காணிப்பு கமேராவில் பதிவாகவே, விதிமுறைகளை மீறியதற்காக தளபதி நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர் போக்குவரத்து போலிசார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு