ஆபாச படங்களை பார்; அந்த உடைகளை அணி!! -வற்புறுத்திய கணவர் மீது மனைவி முறைப்பாடு-

ஆசிரியர் - Editor II
ஆபாச படங்களை பார்; அந்த உடைகளை அணி!! -வற்புறுத்திய கணவர் மீது மனைவி முறைப்பாடு-

இந்தியாவின் டெல்லியில், தனது மனைவியை ஆபாச படங்களை பார்க்குமாறும்,  அப்படங்களில் வரும் பெண்களைப் போல் ஆடைகளை அணிய வேண்டும் என்று வற்புறுத்தியதால் கணவர் மீது மனைவி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

டெல்லி, கிழக்கு ரோதாஷ் நகரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 2020 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. சில நாட்களுக்கு பின் வரதட்சணை கேட்டு மனதளவிலும், உடலளவிலும் கணவர் துன்புறுத்தியுள்ளார்.

பின்னர் ஆபாச படங்களை பார் என்றும், ஆபாச படங்களில் வருவதை போல உடைகளை அணிந்து வந்து நிற்கவேண்டும் என்றும் கணவர் கொடுமைப்படுத்தியுள்ளர்.

நீண்ட நாள்களாக கணவர் இதை செய்துவந்த நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். மேலும், உடல் மற்றும் மனதளவில் தான் பெரிதும் பாதித்ததாக அந்த பெண் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அந்த பெண்ணின் கணவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று துணை ஆணையர் ரோகித் மீனா கூறியுள்ளார்.

மேலும், இந்த வழக்கில் சாட்சிகள் பதிவுசெய்யப்பட்டு ஆதாரங்கள் பாதுகாக்கப்படுவதாகவும் துணை ஆணையர் கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு