யாழ்.காங்கேசன்துறை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வாள் தயாரித்துக் கொண்டிருந்த 4 பேர் பொலிஸ் சுற்றிவளைப்பில் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்கேசன்துறை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வாள் தயாரித்துக் கொண்டிருந்த 4 பேர் பொலிஸ் சுற்றிவளைப்பில் கைது!

யாழ்.காங்கேசன்துறை பகுதியில் வாள் செய்து கொண்டிருந்த நால்வரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றில் வைத்து வாள் செய்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டினை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தினர். 

அதன் போது வாள் செய்து கொண்டிருந்த நால்வரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு