அரசியல் கைதிகளை விடுவிக்க கூறி யாழ் பேரூந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம்!
வலிந்து காணமலாக்கப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யக்கோரி யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
முன்னிலை சோசலிசம் கட்சியின் ஏற்பாட்டில் இன்று மதியம் 12 மணிக்கு இக் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
லலித் மற்றும் குகன் யாழில் வைத்து காணாமலாக்கப்பட்ட வழக்கு இன்று யாழ் நீதி மூன்றில் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து அவர்கள் சார்ந்த கட்சியின் ஏற்பாட்டில் லலித் , குகன் உள்ளிட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட அனைவரையும் உடன் விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதன் போது காணமலாக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன் பல்வேறு கோணங்களுக்கு எழுப்பப்பட்டன.