சக மாணவனை தாக்கி அதனை வீடியோ பதிவு செய்து ரிக்ரொக்கில் பதிவேற்றிய இரு மாணவர்கள் கைது, மேலும் சிலரை தேடுகிறது பொலிஸ்...

ஆசிரியர் - Editor I
சக மாணவனை தாக்கி அதனை வீடியோ பதிவு செய்து ரிக்ரொக்கில் பதிவேற்றிய இரு மாணவர்கள் கைது, மேலும் சிலரை தேடுகிறது பொலிஸ்...

பாடசாலை மாணவன் ஒருவனை தாக்கி அதனை வீடியோ பதிவு செய்து ரிக் ரொக்கில் பதிவேற்றிய இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் சில மாணவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

வவுனியா மாவட்டத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் சிலர் இணைந்து சக மாணவனை கடந்த வெள்ளிக்கிழமை  வைரவ புளியங்குளம் வீதியில் வைத்து தலைக்கவசம், கொட்டன்தடி கொண்டு சரமாரியாக தாக்கி அதனை காணொளியாக பதிவு செய்து டிக்டொக்கில் சாகசம் காட்டி பதிவு செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவன் பொலிஸில் முறைப்பாடு செய்ததனை தொடர்ந்து  குறித்த வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய ஓர் மாணவனை பொலிஸார் கைது செய்து விளக்கமறியலில்  வைத்துள்ளதுடன், 

இன்றைய தினம் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய  இன்னொரு மாணவனையும் கைது செய்து தடுப்புகாவலில் வைத்துள்ளார்கள்.

மேலும் இச் சம்பவத்தின் முக்கிய ஆதரமான காணொளியை கொண்டு இதனுடன் தொடர்புடைய ஏனையவர்களை தேடும் பணியினை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் ,விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு