வடக்கில் முதல் தடவையாக A-9 வீதியில் துவிச்சக்கர வண்டி பயணிகளுக்கு இட ஒதுக்கீடு..

ஆசிரியர் - Editor I
வடக்கில் முதல் தடவையாக A-9 வீதியில் துவிச்சக்கர வண்டி பயணிகளுக்கு இட ஒதுக்கீடு..

யாழ்.கைதடி மற்றும் நாவற்குழி பாலம் புனரமைக்க ப்பட்டுவரும் நிலையில் மேற்படி பாலத்திடனான் வீ தியில் வடமாகாணத்திலேயே முதல் தடவையாக து விச்சக்கர வண்டியில் பயணிப்போருக்காக இடம் ஒ துக்கப்பட்டுள்ளது.

கைதடியில் அமைக்கப்பட்டு வரும் புதிய கொங்கிறீட் பாலத்துடன்  அமைக்கப்பட்ட வீதியில் (Bicycle Lane) துவிச்சக்கரவண்டி பாதைக்கான  சமிக்ஞை குறியீடுகள்  அங்கு வரையப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலும் வடமாகாணத்திலும் இப்பாலத்துடான  வீதியிலேயே முதல் முறையாக வரையப்பட்டுள்ளது. 

இப்பால வேலைகள் நிறைவுக் கட்டத்தை எட்டிவரும் நிலையில் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது.  அத்துடன்  நாவற்குழி பால வேலைகளும் துரித கதியில் இடம்பெற்று வருகின்றமை குறிபபிடத்தக்கது.




பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு