யாழ்.நல்லுாரை சேர்ந்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு! தம்பியை காப்பாற்ற சென்ற அண்ணனும் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.நல்லுாரை சேர்ந்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு! தம்பியை காப்பாற்ற சென்ற அண்ணனும் உயிரிழப்பு..

யாழ்.நல்லுார் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவர் குளத்தில் நீராட சென்றிருந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

குறித்த சம்பவம் முல்லைத்தீவு - வவுனிக்குளத்தில் இடம்பெற்றிருக்கின்றது. மரண வீட்டில் கலந்துகொள்ள முல்லைத்தீவு வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குளத்தின் பிரதான வாய்க்கால் பகுதிக்குள் இளைய சகோதரர் நீராடிக் கொண்டிருந்தபோது, அவர் நீரில் தத்தளிப்பதைக் கண்டு மூத்த சகோதரர் அவரைக் காப்பாற்ற சென்றுள்ளார். 

இதன்போது இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இச் சம்பவத்தில் யாழ்.நல்லூர் யமுனா வீதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சுரேஸ் (வயது-16), ரவிச்சந்திரன் சுமன் (வயது-27) 

ஆகிய இரு சகோதரர்களே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு