முல்லைத்தீவு - யாழ்ப்பாணம் இ.போ.ச பேருந்து மீது கல்வீசி தாக்குதல்...

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு - யாழ்ப்பாணம் இ.போ.ச பேருந்து மீது கல்வீசி தாக்குதல்...

வடகிழக்கு மாகாணங்கள் தழுவிய ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டுவரும் நிலையில் முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட சாலைக்கு சொந்தமான அரச பேருந்து ஒன்று அதிகாலை 5.30 மணியளவில் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த போது இன்று அதிகாலை செல்வபுரம் பகுதியில் கல்வீச்சு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

உந்துருளியில் வந்த இருவர் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளார்கள். இதன்போது பேருந்தின் முன் கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன் சாரதியும் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு சாலையில் இருந்து செல்லும் அனைத்து அரச பேருந்துக்களுக்கும் பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு